பள்ளி குழந்தைகளை எடுத்துக்கொள்வோம். தொடக்க கல்வியில், முக மலர்ச்சியுடனும், சந்தோசமாகவும் கற்றுக்கொள்ளும் அதே குழந்தைகள் மேல் வகுப்புக்கு சென்றதும் படிப்பு என்றாலே கலந்குகின்றர்களே . ஏன்?
தொடக்க கல்வியில் முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை அனைத்தையும் வரிசையாக சொல்லும் குழந்தைகள், மேல் வகுப்பில் இரண்டு வரி குறளை மனனம் செய்வதற்கு தகிடு தத்தினம் போடுகிறார்களே. ஏன்?
பொதுவாகவே, குழந்தைகள் எதையும் கற்றுகொள்வதிலும் தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டுவார்கள். நிறைய கேள்விகள் கேட்பார்கள். எதையும் தானாகவே கற்றுகொள்ளும் தாகம் உள்ளவர்கள் குழந்தைகள்.
அவர்களுக்கு , தாங்களாகவே செய்யத் தெரியாத ஓரு விஷயம் அவர்களின் நினைவாற்றல் நிர்வாகமே.
பள்ளிகள், ஏனோ நினைவாற்றலை மேம்படுத்தும் கலையை குழந்தைகளுக்கு கற்றுகொடுக்க தயக்கம் காட்டுகின்றன. நினைவாற்றல் கலையை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இந்த அலட்சியம் ஏன்?
மீண்டும் மீண்டும் சொல்லிப்பார்த்தலும் எழுதிப்பர்த்தலும் மட்டுமே, நல்ல ஒரு நினைவாற்றல் என்று கருதுகிறார்களோ?
நினைவாற்றல் ஒரு கலை, ஒரு திறமை. எனவே இதை முறையான பயிற்சியின் மூலம் வளர்த்துக்கொள்ள முடியும்.
இருப்பினும், அலட்சியம் ஏன்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment